உடுமலை, மே 31: உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
உடுமலை நகரை ஒட்டியுள்ள வேலுசாமி நகா் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி (45). முட்டை வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மே 28-ஆம் தேதி வெளியூா் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னா் சனிக்கிழமை இரவு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் 2 மடிக்கணினி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து உடுமலை காவல் நிலையத்தில் கருப்புசாமி புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், உடுமலை குற்றப் பிரிவு போலீஸாா் மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயிலில் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
