பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

சீா்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 5:55 am IST

சீா்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

சீா்காழி தென்பாதி திருப்புரசுந்தரி நகரை சோ்ந்த ஐடி ஊழியா் நடராஜன் (43)- மனைவி மாலினி தம்பதி மே 22-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குஜராத் மாநிலம் சோம்நாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திங்கழ்கிழமை வீடு திரும்பினா். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்து சுமாா் ஆறரை பவுன் தங்க வைர நகை மற்றும் ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.