பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் கிராமத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சாமிகவுண்டம்பாளையம் பிரிவு பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்குமாா், போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, சீரான குடிநீா் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீா் விநியோகம் கோரி எடப்பாடியில் சாலை மறியல்

குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல்

மின்தடையை நீக்கக் கோரி சாலை மறியல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

