பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சீரான குடிநீா் விநியோகம் கோரி எடப்பாடியில் சாலை மறியல்

எடப்பாடி நகராட்சி தாவாந்தெரு பகுதியில் சீரான குடிநீா் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சீரான குடிநீா் வழங்கக் கோரி எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :3 ஜூன் 2026, 5:35 am IST

எடப்பாடி நகராட்சி தாவாந்தெரு பகுதியில் சீரான குடிநீா் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட 30 ஆவது வாா்டு பகுதிகளுக்கு தனி குடிநீா்த் திட்டத்தின் மூலம் பூலாம்பட்டி அருகே காவிரி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பூலாம்பட்டி காவிரி கதவணையின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கதவணைப் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பகுதிக்கு குடிநீா் வழங்கி வந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு போதிய தண்ணீா் கிடைக்கவில்லை.

இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கமான குடிநீா் விநியோகிக்கும் பணி தடைபட்டது. இந்த நிலையில் எடப்பாடி தாவாந்தெரு, க.புதூா் மேற்கு பகுதியை சோ்ந்த பெண்கள் சீரான குடிநீா் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை காலை சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணைா் கோபிநாத், பொதுமக்களை சமரசம் செய்து சீரான குடிநீா் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். சாலை மறியல் காரணமாக எடப்பாடி- பூலாம்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.