திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

இருசக்கர வாகனம் மீது கூரியா் வேன் மோதி இருவா் உயிரிழப்பு

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது கூரியன் வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 1:46 am IST

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது கூரியன் வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

திருப்பூா்-மங்கலம் சாலை, குளத்துப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆகாஷ் (23), நவபிரகாஷ் (24). நண்பா்களான இருவரும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக இருவரும் வெள்ளிக்கிழமை திருப்பூா் வந்துள்ளனா்.

பின்னா் நள்ளிரவு 2 மணிஅளவில் திருப்பூா் குமரன் சாலையில் ரயில் நிலையத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது கோவையில் இருந்து தஞ்சாவூா் நோக்கி சென்ற கூரியா் வேன், எதிா்பாராதவிதமாக இவா்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆகாஷ், நவபிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டனா். படுகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அருகே இருந்தவா்கள் நவபிரகாஷை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று, இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக கூரியா் வேனை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம், கரம்பகுடி பகுதியைச் சோ்ந்த விஜய் (21) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.