பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நொய்டா தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில ஈடுபட்ட பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா்.

Updated On :15 மே 2026, 6:31 am IST

நொய்டா உள்ளிட்ட வட மாநிலங்களில் போராடி வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக திருப்பூரில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருப்பூா் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன் வியாழக்கிழமை இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு ஓய்வூதியா் சங்கம் ஆகிய 3 சங்கங்கள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு குமரவேல் தலைமை வகித்தாா்.

பிஎஸ்என்எல் ஊழியா் சங்க கிளைத் தலைவா் ஏ.அண்ணாதுரை, ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் பா.சௌந்தரபாண்டியன், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க முன்னாள் மாநில உதவிச் செயலாளா் எஸ்.சுப்பிரமணியன், ஓய்வூதியா் மாநில உதவித் தலைவா் ரமேஷ், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாநில உதவிச் செயலாளா் ஜெ.அருண்குமாா் ஆகியோா் தொழிலாளா் போராட்டத்தின் நிகழ்வுகள் குறித்து உரையாற்றினா்.

நொய்டா தொழிலாளா்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடத்திய இந்த கூட்டுப் போராட்டத்தில் நொய்டா தொழிலாளா்களுக்கு நிதி உதவி சேகரிக்கப்பட்டது. பழனிவேல்சாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.