வெள்ளக்கோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி முகாமை தொடங்கிவைத்தாா். இளைஞா் அமைப்பு தலைவா் முரளி, ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சத்தியராஜ் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். முகாமில் தகுதியான 132 நபா்களிடம் இருந்து 132 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.
அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழை மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: நாகூா் சித்திக் அறக்கட்டளை அறிவிப்பு

ரத்த நாள வீக்கம்: பெண்களின் உயிரைக் காத்த அரசு மருத்துவா்கள்

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

ரத்த தான முகாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

