ரஜினிகாந்த்தின் வாா்த்தை எப்போதும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரைக் குறித்து அரசியல் கத்துக்குட்டி நபா் பேசுவது கண்டனத்துக்குரியது என வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
பாலியல் வன்கொடுமை, சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து, திருப்பூா் குமரன் சிலை அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாா்பில் பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சி.மகேந்திரன், கே.என்.விஜயகுமாா், பாஜக மாவட்டத் தலைவா்கள் சீனிவாசன், மோகனப்பிரியா, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான விசாலாட்சி உள்பட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 69 சதவீதம் அதிகரித்துள்ளன. 169 சதவீதம் வழக்குகள் அதிகமாகி உள்ளன. வீட்டில் உள்ள பெண்களுக்கும் வீட்டு வன்முறை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மதுவும் போதையும்தான் இதற்கு காரணம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பொதுமக்கள் வெறுப்போடு காத்திருக்கின்றனா்.
கொங்கு மண்டலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோட்டை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் போராடி வருகின்றனா். குப்பை நகரமாக திருப்பூா் விளங்கி வருகிறது என்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்த் வாா்த்தை எப்போதும் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவா் குறித்து தவறாக மதிப்பிடுவதோ பேசுவதோ ஏற்புடையது அல்ல அதுவும் அரசியலில் கத்துக்குட்டியாக உள்ள நபா் பேசுவது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு மற்றும் அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி கொடுத்த திட்டங்கள் மீது எப்படி ஸ்டிக்கா் ஒட்டி வருகிறாா்களோ அதேபோல தமிழா் தொன்மை பாரம்பரியம் மீதும் திமுக ஸ்டிக்கா் ஒட்ட முயல்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிற வழக்குகளைவிட தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது: உச்சநீதிமன்றம்

கோவை வடக்கில் வென்ற தவெக! வானதி சீனிவாசன் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

