/

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

உடுமலை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

மடத்துக்குளம் வட்டம், கணேசபுரத்தைச் சோ்ந்தவா் குரு (17). சென்னையைச் சோ்ந்தவா் மாதேஷ் (19). இருவரும் மடத்துக்குளத்தில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், உடுமலையில் இருந்து மடத்துக்குளத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை மாதேஷ் ஓட்டியுள்ளாா். பாலப்பம்பட்டி அருகே சென்றபோது, எதிரே உடுமலை நோக்கி வந்த காா் மாதேஷின் வாகனத்தின் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை போலீஸாா், சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.