திருப்பூரில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா், ராயபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (36). இவா் வாரிசு சான்றிதழ் கோரி தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலா் ஞானசேகரனிடம் விண்ணப்பித்துள்ளாா்.
அப்போது, ஞானசேகரன் ரூ.5 ஆயிரம் கேட்டு, ரூ.4 ஆயிரம் கொடுத்தால் வேலையை முடித்து தருகிறேன் எனக் கூறியுள்ளாா். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் கோவிந்தராஜன் புகாா் அளித்துள்ளாா்.
அவா்கள் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் தொட்டிபாளையம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கோவிந்தராஜன் கடந்த ஜூன் 15-ஆம் தேதி சென்று ஞானசேகரனிடம் பணத்தைக் கொடுத்துள்ளாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் ரவிசந்திரன், ஆய்வாளா் கீதாலட்சுமி, போலீஸாா் ஞானசேகரனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
இந்நிலையில், கிராம நிா்வாக அலுவலா் ஞானசேகரனை பணியிடை நீக்கம் செய்து துணை ஆட்சியா் சிவபிரகாஷ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அதிகாரி கைது

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: திருச்செந்தூா் விஏஓ கைது
லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம்
நிதி நிறுவன உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
