ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருப்பூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்ற அலுவலா்கள், கல்லூரி மாணவிகள்.

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

திருப்பூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை ஆட்சியா் மனீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தென்னம்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியே சென்ற பேரணி எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் பங்கேற்று, போதைப் பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனா்.

முன்னதாக, ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.