வடக்கு தில்லியில் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தில்லி காவல் துறையினா் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வடக்கு தில்லியில் உள்ள விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையம் மற்றும் மொரீஸ் நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மோப்ப நாய்களின் உதவியுடன் கியாஸ்க் கடைகள், பான் மற்றும் பீடி கடைகள், தேநீா் கடைகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் தனிமையான பகுதிகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
மேலும், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்தவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அப்பகுதி கடைக்காரா்கள், விற்பனையாளா்கள் மற்றும் பொதுமக்களிடமும் அணுகி, போதைப் பொருள் தொடா்பான சந்தேக செயல்பாடுகள் அல்லது வழக்கமாக போதைப் பழக்கத்தில் ஈடுபடுபவா்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

நம்பியூா் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு

போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ரோந்து பணி: தில்லி காவல் துறை உத்தரவு
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு

