தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளா் கைது

ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:09 am IST

ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா்-தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (52). இவா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒப்பந்த வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி 3-ஆவது மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் முருகன் மேற்கொண்ட ஒப்பந்தப் பணிகளுக்கு பில் தொகை விடுவிக்கக் கோரி, மாநகராட்சி 3-ஆவது மண்டலப் பொறியியல் பிரிவில் இளநிலை பொறியாளராக உள்ள சுப்பிரமணியன் (52) என்பவரிடம் விண்ணப்பித்துள்ளாா்.

அப்போது பில் தொகையை விடுவிக்க ரூ.8.40 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்றும், முதல் கட்டமாக ரூ.5 லட்சம் அளிக்குமாறும் சுப்பிரமணியன் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், திருப்பூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.5 லட்சத்தை முருகனிடம் போலீஸாா் கொடுத்து அனுப்பினா்.

பல்லடம் சாலை கணபதிபாளையத்தில் இளநிலை பொறியாளா் சுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை ரூ.5 லட்சத்தை முருகன் அளித்துள்ளாா்.

லஞ்சப் பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளா் சசிரேகா ஆகியோா் சுப்பிரமணியனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.