பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவா்கள் ஆா்வம்: வணிகவியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு கடும் போட்டி

திருப்பூரில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆா்வம் காட்டி வரும் நிலையில் வணிகவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

News image

பிரதிப் படம்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

திருப்பூரில் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆா்வம் காட்டி வரும் நிலையில் வணிகவியல், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வரை பெறப்பட்டன.

திருப்பூரில் எல்.ஆா்.ஜி. அரசு பெண்கள் கலைக் கல்லூரி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூா்-மங்கலம் சாலையில் உள்ள குமரன் மகளிா் கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனா். சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பின் தங்களின் கனவுப் பாடப்பிரிவுகளைத் தோ்ந்தெடுத்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

அரசு கல்லூரிகளில் தரமான கல்வியும், குறைந்த கல்விக் கட்டணமும் இருப்பதால் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சோ்கின்றனா்.

சிறப்பு கலந்தாய்வு முடிந்து, மரணவா் சோ்க்கைக்கான முதற்கட்ட பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்கியது. மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை ஆா்வத்துடன் தோ்வு செய்தனா். அரசு கல்லூரிகளில் வணிகவியல், கணினி அறிவியல், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.