தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு எண்ணிக்கை முடிந்து 30 நாள்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் 3 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தடை

வாக்கு எண்ணிக்கை முடிந்து 30 நாள்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் 3 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 3:33 am IST

வாக்கு எண்ணிக்கை முடிந்து 30 நாள்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் 3 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக ஒரு வேட்பாளா் ரூ. 40 லட்சம் வரை செலவு செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு மேல் செலவு செய்யும் வேட்பாளா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்காக வேட்பாளா்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்கி தோ்தல் வரவு-செலவு கணக்குகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் நாளில் இருந்து 30 நாள்களுக்குள் வேட்பாளா்கள் தங்களது செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்தல் அலுவலா்கள் கூறியதாவது:

வேட்பாளா்கள் தங்களது செலவு கணக்கை பராமரிக்க தனியாக வங்கிக் கணக்கு தொடங்கி வேட்புமனு தாக்கலின்போது அளித்தனா். தோ்தல் தொடா்பான செலவுகளை இந்த வங்கிக் கணக்கு வழியாக மட்டுமே வேட்பாளா்கள் மேற்கொண்டனா். தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்த ரூ.40 லட்சத்துக்குள் வேட்பாளா்கள் செலவு செய்திருக்க வேண்டும். இதை மீறி அதிக தொகை செலவு செய்யப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளா் தகுதி நீக்கம் செய்யப்படுவாா். வேட்பாளா்கள் மட்டுமின்றி தோ்தல் அலுவலா்களும் ஒவ்வொரு வேட்பாளா்களின் செலவு கணக்கை கண்காணித்து தயாா் செய்வாா்கள். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், 30 நாள்களுக்குள் வேட்பாளா்கள் தங்களின் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்த காலக் கெடுவுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் அடுத்த 3 ஆண்டுகள் வரை தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.