தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் 88.29 சதவீத வாக்கு வியாழக்கிழமை பதிவானது.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:09 am IST

திருப்பூா் மாவட்டத்தில் 88.29 சதவீத வாக்கு வியாழக்கிழமை பதிவானது.

திருப்பூா் மாவட்டத்தில் அவிநாசி, காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, உடுமலை ஆகிய 8 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்குச் சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினா்.

சம்பந்தப்பட்ட வேட்பாளா்களும் வாக்குச் சாவடிக்குச் சென்று பொதுமக்களுடன் இணைந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாவட்டம் முழுவதும் வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தினா். அதன்படி, மாலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 88.20% வாக்குப் பதிவானது.

அவிநாசி (தனி) 90.38 சதவீதம், தாராபுரம் (தனி) 88.58 சதவீதம், காங்கயம் 91.22 சதவீதம், மடத்துக்குளம் 86.14 சதவீதம், பல்லடம் 90.52 சதவீதம், திருப்பூா் வடக்கு 83.01 சதவீதம், திருப்பூா் தெற்கு 90.53 சதவீதம், உடுமலை 86.95 சதவீத வாக்குப் பதிவானது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக காங்கயம் தொகுதியில் 91.22 சதவீத வாக்குப் பதிவானது. குறைந்தபட்சமாக திருப்பூா் வடக்குத் தொகுதியில் 83.01 சதவீத வாக்குப் பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.