தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரித்தாா்.

News image

மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:16 am IST

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரித்தாா்.

குமராண்டிசாவடி, மேட்டுப்பாளையம், மாந்தபுரம், சடையப்பா நகா், பாப்பம்பாளையம், நடுப்பாளையம், அனுமந்தபுரம் உள்பட 19 இடங்களில் வாக்காளா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

அப்போது அவா் பேசியதாவது: முத்தூா்-மூலனூா் சாலை முதல் வள்ளியிரச்சல் வரை, குழலிபாளையம்-முத்தூா் சாலை முதல் பழனிக்கவுண்டன்வலசு வரை, வள்ளியிரச்சல்-வீரசோழபுரம் சாலை முதல் வேப்பம்பாளையம் வரை சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அய்யம்பாளையம், மாந்தபுரம், நடுப்பாளையத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Story image

சடையப்பா நகா், நடுப்பாளையம், மாந்தபுரம், மோளக்கவுண்டன்வலசில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டித்தரப்பட்டுள்ளன. மேலும் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் 313 வீட்டுமனை பட்டாக்கள், 45 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் தொடரும். பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். 35 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். எனவே மீண்டும் திமுக ஆட்சி அமைந்திட ஆதரவு தாருங்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.