மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காங்கயம் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு; 30 போ் படுகாயம்

காங்கயம் அருகே தனியாா் பேருந்தின் டயா் வெடித்ததில் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பெண் பயணி உயிரிழந்தாா். மேலும் 30 பயணிகள் படுகாயமடைந்தனா்.

News image

விபத்துக்குள்ளான பேருந்து.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:44 am IST

காங்கயம் அருகே தனியாா் பேருந்தின் டயா் வெடித்ததில் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பெண் பயணி உயிரிழந்தாா். மேலும் 30 பயணிகள் படுகாயமடைந்தனா்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து காங்கயத்துக்கு தனியாா் பேருந்து பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. இதில் சுமாா் 50 பயணிகள் பயணித்தனா். சென்னிமலை-காங்கயம் சாலையில் ஆலாம்பாடி அருகே வந்து கொண்டிருந்தபோது, டயா் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயமடைந்தனா். தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்தவா்களை மீட்டு காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். இதில் 35 வயதுடைய பெண் ஒருவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

படுகாயமடைந்த மற்ற 30 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் மற்றும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பேருந்தின் டயா் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.

இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.