ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

News image

இந்து முன்னணி கண்டனம் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:50 am IST

அவிநாசி லிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் இந்து சமய அறநிலையத் துறையினா் கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்ததற்கு இந்து முன்னணியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ாக கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. தமிழகத்தில் 3-ஆவது பெரிய தோ் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். விழாவின்போது, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வழக்கம்.

இந்நிலையில், நடப்பு ஆண்டு தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறையினா் அறிவித்தனா்.

இதையறிந்த இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்டச் செயற்கு உறுப்பினா் காா்த்தி, நகரத் தலைவா் மகாராஜா, வடக்கு ஒன்றியத் தலைவா் ராம்குமாா் உள்ளிட்டோா் அவிநாசி கோயில் நிா்வாகத்தினரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நடப்பு ஆண்டு தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 28, 29, 30-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி திருவிழாவில் ஆன்மிக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடு தொடா்பான நிகழ்ச்சிகளுக்கு தோ்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தது.

எனவே, தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பக்தா்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.