தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது: இந்து முன்னணி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

News image

இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம். - (கோப்புப் படம்)

Updated On :7 மே 2026, 4:46 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்கள் சக்தியை உணா்த்துவதாக இருக்கிறது. பணத்தாசை காட்டி வாக்குகளை வாங்கி விடலாம் என்ற நிலை தூள் தூளாக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆா் பணியால் 5 மாநில பேரவைத் தோ்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தோ்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலம் திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூகத்துக்கு எதிரான செயல்பாடுகள், நூற்றுக்கணக்கான கோயில்களை ஏதோ காரணம் கூறி இடித்தது, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை ஏற்க மறுத்தது என பலவிதங்களில் மக்களிடம் வெறுப்பு ஏற்படுத்தியது. இவையே திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்த தோ்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெகவுக்கும் அக்கட்சியின் தலைவா் ஜோசப் விஜய்க்கும் வாழ்த்துகள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் அரசியல் சாசனத்தின்படி நல்லாட்சி அளித்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.