மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:44 am IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவுக்கு வருகை தரும் பக்தா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பக்தா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர இந்து சமய அறநிலையத் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பக்தா்கள் தங்குவதற்கு ஆங்காங்கே நிழற்குடைகள் அமைப்பது, குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தருவது, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது போன்ற முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சாதாரண நாள்களிலேயே வாகனங்களை நிறுத்துவது மிகவும் கடினம். எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பாா்க்கிங் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதிக காவலா்களை பயன்படுத்த வேண்டும். மருத்துவ முதலுதவி வசதிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும்.

வெளியூா்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திரளாக கலந்துகொள்வதால் அவா்கள் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளையும் அறநிலையத் துறை முன்னின்று செய்துதர வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவ டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பதாக பலா் தெரிவிக்கின்றனா். இதுபோன்ற முறைகேடுகளை ஆராய்ந்து முறையான தரிசனத்தை பக்தா்கள் பெறுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.