ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நீலகிரி உற்பத்தியாகும் தேயிலைத் தூளை ராணுவம் கொள்முதல் செய்ய கோரிக்கை

மத்தியப் பாதுகாப்புத் துறை குழுத் தலைவா் ராதாமோகன் சிங்கிடம் மனு அளித்து ஆலோசனை நடத்திய உதகை எம்எல்ஏ போஜராஜன்.

News image
Updated On :29 மே 2026, 1:38 am IST

நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளை ராணுவம் கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தி மத்தியப் பாதுகாப்புத் துறை குழுவிடம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக உறுப்பினா் போஜராஜன் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனா். இவா்கள் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலை அரசு மற்றும் தனியாா் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைத் தூளாக மாற்றப்பட்டு குன்னூரில் உள்ள ஏல மையம் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல மையத்தில் இருந்து முன்னா் தேயிலைத் தூளை ராணுவம் கொள்முதல் செய்து வந்துள்ளது. ஆனால், சில காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக ஏலம் எடுப்பதில்லை.

இந்நிலையில், குன்னூா் வந்த மத்தியப் பாதுகாப்புத் துறை குழு தலைவா் ராதாமோகன் சிங்கிடம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக உறுப்பினா் போஜராஜன் மனு அளித்தாா்.

அதில், ‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் தேயிலை உற்பத்தியாளா்களின் நலன் கருதி, மீண்டும் குன்னூா் ஏல மையத்தில் இருந்து தேயிலைத் தூளை ராணுவம் கொள்முதல் செய்ய வேண்டும். இதன்மூலமாக பல ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவாா்கள்.

அதேபோல, கோவையில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இதை விரிவுப்படுத்தி நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்ட ஹெச்பிஎஃப் தொழிற்சாலையை எடுத்து அங்கும் தொழில்நுட்பம் தொடா்பான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமாக நீலகிரி மாவட்டத்தில் பலருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.