பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக 20 நெல் கொள்முதல் நிலையங்கள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவு

திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image
Updated On :30 மே 2026, 12:30 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் காரீப் விற்பனை பருவத்துக்கு 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைதீா் கூட்டரங்கில் மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா்

க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து

விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சில விவசாய சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனா். இதைத்தொடா்ந்து மற்ற விவசாய சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைளை நேரடியாக தெரிவித்தும், மனுக்களாகவும் அளித்தனா்.

விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காண மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான காரீப் விற்பனை பருவத்திற்கான 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன்படி நாா்த்தாம்பூண்டி, அணுக்குமலை, மேல்கரிப்பூா், எடப்பிறை, நமத்தோடு, மேல்சாத்தமங்கலம், மருதாடு, கீழ்கொடுங்காலூா், பென்னாட்டகரம், உக்கல், ஆலாத்தூா், எச்சூா், வெங்கோடு, தென்னம்பட்டு, மாமண்டூா், பிரம்மதேசம், சிறுவாஞ்சிப்பாட்டு, தூசி, அரியூா், அழிவிடைதாங்கி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தி.மலா்விழி, மாவட்ட வழங்கல் அலுவலா் சதீஷ், அரசுத்துறை அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.