பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜூன் 30 வரை நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

மழை காரணமாக குறிப்பிட்ட நாள்களில் நெல் அறுவடை செய்ய முடியாததால் நெல் கொள்முதல் செய்வதற்கான காலஅவகாசத்தை ஜூன் 30 வரை அரசு நெல் கொள்முதல் நிலையம் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 7:03 am IST

மழை காரணமாக குறிப்பிட்ட நாள்களில் நெல் அறுவடை செய்ய முடியாததால் நெல் கொள்முதல் செய்வதற்கான காலஅவகாசத்தை ஜூன் 30 வரை அரசு நெல் கொள்முதல் நிலையம் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே கூடமலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு தம்மம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று வருகின்றனா். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒருபோகம் குறுவை சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான,கொள்முதல் காலம் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் தொடங்கி மே, ஜூன் மாதங்களில் முடிவடையும்.

நிகழ் பருவத்துக்கான கொள்முதல் காலஅவகாசம் ஜூன் 6 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாக தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கி நெல் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் கூடமலை அரசு நெல் கொள்முதல் நிலையம் நெல் கொள்முதலுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.