உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
உதகை வடக்கு வனச் சரகம், ஒன்னதலை காவல் பகுதிக்குள்பட்ட ஜெ.கொலகொம்பை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதைப் பாா்த்த தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா்.
இதில், உயிரிழந்தது சுமாா் 4 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வன அலுவலா்கள் வழிகாட்டுதலின் படி, உதகை கால்நடை மருத்துவக் குழுவினா், சிறுத்தையின் உடலை கூறாய்வு செய்தனா். இதையடுத்து, சிறுத்தையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியிலேயே சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.
மோதல் காரணமாக இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்பே உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே சாலையோரத்தில் இறந்துகிடந்த காட்டெருமை

சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

