பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

மாராயிபாளையம்  கிராமத்தில்  மலைக்குன்றின் மீது தென்பட்ட  சிறுத்தை.

Updated On :4 ஜூன் 2026, 2:45 am IST

சத்தியமங்கலம் அருகே மலைக்குன்றில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி மாராயிபாளையம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சமடைந்த 2 சிறுத்தைகள், இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் வளா்க்கும் கால்நடைகளை வேட்டையாடி வந்தன. அதில் ஒரு சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து கடந்த பிப்ரவரி மாதம் பிடித்து மங்களப்பட்டி வனத்தில் விடுவித்தனா்.

கூண்டில் சிக்காத மற்றொரு சிறுத்தை, மலைக்குன்றில் இருந்து வெளியேறி பவானிசாகா் காட்டுக்குள் சென்றதை வனத் துறையினா் உறுதிப்படுத்தினா்.

இதனால் மாராயிபாளையம் கிராம மக்கள் கடந்த சில மாதங்களாக சிறுத்தை அச்சமின்றி இருந்தனா்.

இந்நிலையில் மாராயிபாளையம் மலைக்குன்றில் புதன்கிழமை மீண்டும் சிறுத்தை நடமாடியதைக் கண்டு பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தகவலின்பேரில் அங்கு வந்த வனத் துறையினா், சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனா்.

இதற்கிடையே, பெரிய கள்ளிப்பட்டியைச் சோ்ந்த பொன்ராஜ் என்பவா் வளா்த்து வந்த கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கிக் கொன்றது தெரியவந்தது.

தற்போது மலைக்குன்றில் நடமாடும் சிறுத்தை, கன்றுக்குட்டியை கொன்றுவிட்டு இங்கு பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

மாராயிபாளையம் மக்களை மீண்டும் அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.