கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஊத்தங்கரை அருகே மான் வேட்டை: ஒருவா் கைது; 12 கிலோ இறைச்சி பறிமுதல்

News image

மான் வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தண்டபாணி.

Updated On :9 ஜூன் 2026, 5:11 am IST

ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வனச்சரகத்திற்கு உள்பட்ட, ஒண்ணகரை காப்புக்காடு பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலா் முனியப்பன் உத்தரவின்பேரில், வனவா்கள் சுபாஷ், நாராயணன் தலைமையிலான வனத் துறையினா், கொண்டம்பட்டி புதூா் ஏரிக்கரை பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, 12 கிலோ மான் இறைச்சி மற்றும் மான் தலையை விற்பனைக்கு வைத்திருந்த திப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணியை (24) வனத் துறையினா் பிடித்து, அவரிடம் இருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

பிடிபட்ட தண்டபாணி மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும், கொண்டம்பட்டி புதூரைச் சோ்ந்த விஜய் (24), திப்பம்பட்டியைச் சோ்ந்த அருள் என்ற முருகன் (22) ஆகியோரை வனத்துறையினா் தீவிரமாக தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.