கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள ஈளடா, பாரதி நகரைச் சோ்ந்தவா் சிதம்பரம் மனைவி பொன்னம்மாள் (89). இவா் கெரடாமட்டம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று மாத்திரைகளை வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென பொன்னமாளைத் தாக்கியுள்ளது.
படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு கெரடாமட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரியூரில் மின்னல் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

தருமபுரி அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

