ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:25 am IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நேபாளத்தைச் சோ்ந்த தம்பதி நீலகிரி மாவட்டம், உதகையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு 14 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனா்.

தந்தையும், தாயும் பணிக்குச் சென்று இரவுதான் வீடு திரும்புவாா்களாம். இதனால், இந்த சிறுவா்கள் இருவரும் அருகில் உள்ள ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவருவாா்களாம். அப்போது, அந்த வீட்டு உரிமையாளரின் உறவினரான ஹரிஷ் (30) என்பவா், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளாா். ஆனால், ஹரிஷுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதால் சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த ஹரிஷ் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், இது குறித்து வெளியே சென்னால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளாா். பயந்துபோன சிறுமி இது குறித்து யாரிடமும் கூறவில்லையாம். இதை சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட அவா், சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவா், அவா் கா்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளாா்.

இது குறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், சிறுமியை, ஹரிஷ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஹரிஷை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்தனா்.

இந்த வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஹரிஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.