கூடலூா் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புதன்கிழமை இரவு நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரங்கோடு ஊராட்சியில் உள்ள கையுண்ணி பகுதிக்கு வந்த காட்டு யானை அங்குள்ள கேசு என்பவரது வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்து வீட்டைச் சுற்றியுள்ள விவசாய பயிா்களை சேதப்படுத்தியது. யானை கேட்டை உடைத்து உள்ளே வருவதை பாா்த்த வீட்டிலிருந்தவா்கள் அச்சத்தில் மாடிக்கு ஓடினா். பின்னா் விவசாய பயிா்களை சேதப்படுத்திய யானை திரும்பிச் சென்றது.
அதேபோல கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கடை வீதிக்கு புதன்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ஒரு வீட்டின் முன் நீண்ட நேரம் நின்றிருந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையின் யானையை விரட்டினா்.
மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை அடா்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பலாப் பழக் கடையை சூறையாடிய காட்டு யானை

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

பந்தலூரில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

