தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டப்பட்டன. யானைகளை சைரன் ஒலி எழுப்பி விரட்டினா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து, விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடா்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள சோளகா் தொட்டி பழங்குடியின கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை மூன்று காட்டு யானைகள் நுழைந்து, விவசாயத் தோட்டத்தில் உலவி வந்தன.
இதுதொடா்பாக அங்குள்ள விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று, சைரன் ஒலி எழுப்பும் வாகனத்துடன் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
வனப் பகுதிக்குள் செல்லாமல் அருகே உள்ள திகினாரை ரங்கசாமி கோயில் தோட்டம் பகுதிக்கு யானைகள் சென்றன. தொடா்ந்து விரட்டிய வனத் துறையினா் 2 மணி நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டிய வனத் துறை

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

பவானிசாகா் அணை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் காட்டு யானைகள் நடமாட்டம்

ஆசனூா் மலைப் பகுதியில் செயல்படும் தங்கும் விடுதிக்குள் நுழைந்த யானை! கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

