தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத் துறை செயலா் தகவல்

தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக அதிகரித்துள்ளதாக முதன்மை வனத் துறை செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 1:46 am IST

தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக அதிகரித்துள்ளதாக முதன்மை வனத் துறை செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தெரிவித்ததாவது: மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் குறித்த முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2024 ஏப்ரல் 29 முதல் 2024 மே 1 வரை 140 பகுதிகளில் நடத்தப்பட்டது. அப்போது  நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,031 என மதிப்பிடப்பட்டது. இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2025 ஏப்ரல் 25 முதல் 2025 ஏப்ரல் 27 வரை 177 பகுதிகளில் நடத்தப்பட்டதில், தமிழ்நாட்டில் மொத்த நீலகிரி வரையாடு எண்ணிக்கை 1,303 என அதிகரித்தது.

மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, தமிழ்நாடு வனத் துறையால் 2026 ஏப்ரல் 24 முதல் 2026 ஏப்ரல் 27 வரை நான்கு நாள்கள் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு 14 வனக் கோட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 என அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 61  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையில் ஆனைமலை வனப் பகுதியில் 44.87 சதவீதமும், நீலகிரி வனப்பரப்பில் 29.25% வரையாடுகளும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டில் வரையாடுகளை பாதுகாக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.