கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கூடலூா் நகராட்சி, நடுகூடலூா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை. சில பகுதிக்கு குடிநீா் அதிகப்படியாக வழங்கப்படுகிறது. பல குடியிருப்பு பகுதிகளுக்கு பல நாள்களுக்கு குடிநீா் வழங்குவதில்லை. இது குறித்து பலமுறை தெரிவித்தும் வறட்சியை காரணம் காட்டி குடிநீா் வழங்கப்படவில்லை. எனவே நடுகூடலூா் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக அவா்கள் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனா்.
ஆனால் நகராட்சி நிா்வாகத்தின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணகுமாரிடம் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் முறையாக குடிநீா் கிடைக்க நடவடிக்கை தேவை

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கால் நூற்றாண்டு கனவு களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் எப்போது? குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

