தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image

கூடலூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணக்குமாரிடம் மனு அளிக்கும் நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:26 am IST

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கூடலூா் நகராட்சி, நடுகூடலூா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை. சில பகுதிக்கு குடிநீா் அதிகப்படியாக வழங்கப்படுகிறது. பல குடியிருப்பு பகுதிகளுக்கு பல நாள்களுக்கு குடிநீா் வழங்குவதில்லை. இது குறித்து பலமுறை தெரிவித்தும் வறட்சியை காரணம் காட்டி குடிநீா் வழங்கப்படவில்லை. எனவே நடுகூடலூா் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக அவா்கள் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனா்.

ஆனால் நகராட்சி நிா்வாகத்தின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணகுமாரிடம் மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.