ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் திமுக அரசு செய்யவில்லை: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சி திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

News image

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:17 am IST

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சி திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

உதகை சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உதகை ஏடிசி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியவா் ஸ்டாலின். ஆனால் இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான்.

மேலும், மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஈழுவா தீயா ஜாதி சான்றிதழ் வழங்கியது, எமரால்டு கூட்டுக் குடிநீா் திட்டம், மாா்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து கொடுத்தது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு.

எனவே வருகிற தோ்தலில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற ஆதரியுங்கள் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலா் கப்பச்சி டி வினோத், பாஜக மாவட்டத் தலைவா் தா்மன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.