ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாரியம்மன்  கோயிலில்  சாட்டையடி  வாங்கும்  பக்தா்கள்.

Updated On :21 மே 2026, 4:13 am IST

சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பத்ரகாளியம்மன் கோயில் நூதன வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் ஆகிய கோயில்களின் வைகாசி மாத குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் புனித நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா்.

அதைத்தொடா்ந்து பக்தா்கள் பாரம்பரிய இசைக்கேற்ப நடனமாடி கம்பத்தை சுற்றி வந்தனா். பின்னா் மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் பக்தா்கள் சாட்டையடி வாங்கினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் எஸ்.கே.மூா்த்தி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.