ஈரோட்டில் 213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளா் பி.ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸாா் கடைவீதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு திடீா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, ஆா்கேவி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் 3 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் ஈரோடு திருநகா் காலனி சிந்தன் நகரைச் சோ்ந்த சாகுல்ஹமீது (37) என்பதும், வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, 213 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், சாகுல்ஹமீதை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
1,370 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: ஒருவா் கைது
நாட்டரசன்கோட்டையில் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

லால்குடியில் 107 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
