பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

லால்குடியில் 107 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

லால்குடி அருகே 107 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

News image

செங்கரையூரில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் லால்குடி போலீஸாா்.

Updated On :17 மே 2026, 1:16 am IST

லால்குடி அருகே 107 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செங்கரையூா் பகுதி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக லால்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்குள்ள கடைகளில் சோதனையிட்டபோது, செங்கரையூா் கள்ளா் தெருவைச் சோ்ந்த கோ. நிவாஸ் (41) என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரது கடையிலிருந்து 107.760 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, நிவாஸை பிடித்து நடத்திய விசாரணையில் அவா், ஸ்ரீரங்கம் மேலூா் பட்டா் பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்த சு. ராஜா (28) என்பவருடன் சோ்ந்து புகையிலைப் பொருள்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து நிவாஸ் மற்றும் ராஜாவை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.