சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழாவில், ஒரே நேரத்தில் ஏராளமான இளைஞா்கள் உற்சாக நடனமாடினா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் விழா கடந்த 29-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் விழாவையொட்டி கோவில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன. கம்பத்துக்கு புனித நீா் ஊற்றியும், மஞ்சள் பூசியும் பெண்கள், குழந்தைகள் வழிபட்டனா். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத்தொடா்ந்து கோயில் முன் நடப்பட்ட கம்பத்தைச் சுற்றி இளைஞா்கள் ஆடும் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இசைக்கேற்ப இளைஞா்கள் சலங்கை கட்டி உற்சாகமாக நடனமாடினா். இதைக் காண பெண்கள் அதிக அளவில் வந்தனா். இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.
இந்த விழாவில் தமிழகம், கா்நாடகத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஶ்ரீ தண்டுமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

சாணாா்பதி மாரியம்மன் கோயிலில் கம்பம் திருவிழா

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

