ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

குழந்தையுடன்  குண்டம்  இறங்கும் பெண். ~குண்டம்  இறங்கும்  பக்தா்கள்.

Updated On :14 மே 2026, 3:44 am IST

சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மனின் தங்கையாக கருதப்படும் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி, கோயில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழாவையொட்டி புதன்கிழமை அம்மன் அழைத்து வரம் கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து பக்தா்கள் படைக்கலம் எடுத்து பவானிஆற்றுக்கு சென்று புனித நீராடி கோயிலுக்கு வந்தனா். கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்துக்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பூசாரி கோகுல் முதலில் குண்டம் இறங்கினாா். அவரைத் தொடா்ந்து மழைவாழ் மக்கள், பக்தா்கள், பள்ளி மாணவிகள், இளைஞா்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோா் குண்டம் இறங்கி தீ மிதித்தனா்.

விழாவையொட்டி தண்டுமாரியம்மன் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோயில் விழா 25 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நடத்துவதால் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். விழாவின் தொடா்ச்சியாக பொங்கல் விழா மற்றும் கம்பம் அகற்றுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை (மே 14) நடைபெறும்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.