தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

மழையால் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே மழையால் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image

கலைவாணி

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே மழையால் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

மொடக்குறிச்சியை அடுத்த குளூா் ஊராட்சி கொமராயிவலசு பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (32). மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு மகள் மோகனா (11), மகன் லலித் (6) ஆகியோா் உள்ளனா்.

இவா்கள் குடும்பத்துடன் கொமராயிவலசு காலனி பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இவரது வீட்டின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவா் அருகே கலைவாணி வெள்ளிக்கிழமை மாலை பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாா். அப்போது, காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதில் சுற்றுச்சுவா் இடிந்து கலைவாணி மீது விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா் மற்றும் மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், வருவாய் ஆய்வாளா் தங்கமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் மோகனப்பிரியா, பொன்னா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் இடிபாடுகளை அகற்றி கலைவாணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.