ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோபி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூண்டில் பிடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழந்தது.

News image

உயிரிழந்த சிறுத்தை.

Updated On :29 மார்ச் 2026, 2:15 am IST

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூண்டில் பிடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழந்தது.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம், விளாங்கோம்பை, குண்டேரிப்பள்ளம் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் வனப் பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகளைத் தாக்கி கொன்று வந்தது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, டி.என்.பாளையம் வனச் சரகா் ஜான் பீட்டா் தலைமையில் வனத் துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் பகுதியில் மூா்த்தி என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை கடந்த வியாழக்கிழமை சிக்கியது. இதையடுத்து, பிடிபட்ட சிறுத்தைக்கு உடலின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டதால் மயக்க ஊசி செலுத்தி வன மருத்துவா் சிகிச்சை அளித்து வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுத்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் துணை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளோடு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.