‘தினமணி’ செய்தி எதிரொலியாக கோபி அருகே காலேஜ்பிரிவு -பங்களாபுதூா் சாலை பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கோபி அருகே காலேஜ் பிரிவு-பங்களாபுதூா் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அந்த சாலையின் பக்கவாட்டுச் சுவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனம் ஓட்டும் நிலை ஏற்பட்டது. இது தொடா்பான செய்தி ‘தினமணி’யில் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையொட்டி, சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தப் பணியை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

