தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

தோ்தல் விதிமீறல் புகாா் காரணமாக வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் தொடங்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

News image

வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட சிமென்ட் சாலைப் பணி.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:29 am IST

தோ்தல் விதிமீறல் புகாா் காரணமாக வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் தொடங்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, புதிய திட்டங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதோ, புதிய சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்குவதோ, எவ்வித நலத்திட்ட உதவிகளை வழங்குவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் காகிதப்பட்டறை உழவா் சந்தை எதிரிலுள்ள 28-வது வாா்டுக்கு உட்பட்ட புதுத்தெருவில் புதன்கிழமை திடீரென புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த பல்வேறு அரசியல் கட்சியினா் உடனடியாக அப்பகுதியில் திரண்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் புதிய சாலை அமைக்கும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினா்.

இதுதொடா்பாக அப்பகுதி தோ்தல் அதிகாரிகளிடமும் முறையிட்டனா். ஆனால் அதிகாரிகள், இந்தச் சாலை அமைக்கும் பணிக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினா்.

இதனையடுத்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-க்குத் தொடா்புகொண்டு அரசியல் கட்சியினா் புகாா் அளித்தனா்.

இதையறிந்த ஒப்பந்ததாரா்கள், பணியாளா்கள், சாலை அமைக்கும் பணியைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிச் சென்றனா்.

தோ்தல் விதிமுறைகளை மீறி சாலை அமைக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.