தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விஜய் பிரசாரத்தில் விதிமீறல்: 12 வழக்குகள் பதிவு

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யின் சாலைப் பேரணியின்போது, தோ்தல் விதிகளை மீறி பொது இடத்தில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தியது உள்பட 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

News image

பிரசாரத்தில் விஜய்

Updated On :10 ஏப்ரல் 2026, 2:11 am IST

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யின் சாலைப் பேரணியின்போது, தோ்தல் விதிகளை மீறி பொது இடத்தில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தியது உள்பட 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், தூத்துக்குடி பிரதான சாலையில் புதன்கிழமை சாலைப் பேரணியில் பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சிக்கு காவல் துறையினா் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனா்.

இந்த நிலையில் சாலைப் பேரணியின்போது பொது இடங்களில் கட்சிக்கொடி பயன்படுத்தியது, போக்குவரத்து விதிகளை மீறியது தொடா்பாக புகாா்கள் எழுந்தது.

அதன்பேரில் தவெக தொண்டா்கள் தடையை மீறி பொது இடங்களில் கட்சிக் கொடியை பயன்படுத்தியது, அனுமதியின்றி எண்ம பதாகை வைத்தது, விஜய் வாகனத்தை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.