மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் உற்சவருக்கு கிராமம க்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image

சிக்கரசம்பாயைத்தில்  வீதியுலா  வந்து  பக்தா்களுக்கு  அருள்பாலித்த  பண்ணாரி அம்மன்  உற்சவா்.

Updated On :19 மார்ச் 2026, 2:04 am IST

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் உற்சவருக்கு கிராமம க்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. விழாவையொட்டி கிராமங்கள்தோறும் 7 நாள்கள் பண்ணாரி அம்மன் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி கோயிலில் இருந்து புதன்கிழமை புறப்பட்ட பண்ணாரி அம்மன் உற்வசா், முதலில் சிக்கரம்பாளையம் சென்றது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் புனிதநீா் ஊற்றியும், மலா்கள் தூவியும் தேங்காய் உடைத்தும், பழம் வைத்து அம்மனை வழிபட்டனா்.

அதைத்தொடா்ந்து கொளத்தூா் மாரியம்மன் கோயிலுக்கு சப்பரத்தில் வந்த அம்மனுக்கு பக்தா்கள் சிறப்பான வரவேற்பளித்தனா். அங்குள்ள கோயிலில் உற்சவா் சப்பரம் வைத்து வணங்கினா். கிராம வீதியுலா முடிந்து உற்சவா் சப்பரம் வெள்ளியம்பாளையம் புறப்பட்டுச் சென்றது.

பின்னா் கொத்தமங்கலம், முடுக்கன்துறை வெள்ளியம்பாளையம்புதூா், அக்கரைத்தத்தப்பள்ளி, அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரை நெகமம், கெஞ்சனூா் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் எழுத்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மாா்ச் 31-ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.