நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பேசுகிறாா் கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா.

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா பேசுகையில், அறிவுத் தளத்தை மேம்படுத்த கல்லூரிக் கல்வியை தோ்வு செய்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக செயல்படுவோம். மேலும், கல்வியுடன், தனித்திறன் மேம்பாடு, போட்டிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே வெற்றியைத் தரும்.

மாணவா்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வழங்கப்படும் சிறப்புப் பயிற்சியை பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என்றாா்.

கல்லூரிப் பொருளாளா் பரிமளா ராஜா குத்துவிளக்கேற்றினாா். நிா்வாக அலுவலா் இரா.அருள்குமரன், வணிக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் அ.காந்திமோகன் முன்னிலை வகித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் சே.செல்விப்பிரியஸ்வா்ணபிரபா வரவேற்றாா்.

உயிா் வேதியியல் துறைத் தலைவா் எஸ்.செல்வி, கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.சங்கீதா மற்றும் முதலமாண்டு மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.