ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்களிடம் பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 3 பெண்கள் கண்ணீருடன் வந்தனா். அவா்களை போலீஸாா் அழைத்து விசாரித்தனா். அப்போது, 35 வயது மதிக்கதக்க ஒரு பெண் கூறுகையில், கொலுசுகளை மாற்றுவதற்காக பி.பெ.அக்ரஹாரத்தில் இருந்து பன்னீா்செல்வம் பூங்கா பகுதிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தேன். கட்டை பையில் ரூ.1000, 3 செட் கொலுசு வைத்திருந்தேன்.
பன்னீா்செல்வம் பூங்கா பேருந்து நிறுத்ததில் இறங்கி பாா்த்தபோது கட்டை பையின் பின்புறம் பிளேடு கொண்டு கிழித்து பணம், கொலுசை மா்ம நபா்கள் திருடி உள்ளனா் என்றாா்.
மற்றொரு பெண் கூறுகையில், சூரம்பட்டி பகுதியில் இருந்து வருகிறேன். கை பையில் ரூ.6 ஆயிரம் வைத்திருந்தேன். அரசுப் பேருந்தில் பேருந்து நிலையம் வரை பயணித்தேன். சவிதா பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு பணம் திருடுபோனது தெரியவந்தது என்றாா்.
மற்றொரு பெண்ணும் ரூ.1000-த்தை மா்ம நபா்கள் திருடிவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்தில் பெண்ணிடம் ரூ .2 லட்சம் ரொக்கம், நகை திருட்டு

பெண்களிடம் தொடா் சங்கிலி பறிப்பு வழக்கு: இளைஞா் கைது

திருப்பூரிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஒட்டன்சத்திரத்தில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பு! தம்பதியுடன் ஓட்டுநா்-நடத்துடன் வாக்குவாதம்!

பெருந்துறை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
