தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

பிரதமா் நரேந்திரமோடி ஆட்சியில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்: எஸ்.ஆா்.சுப்ரமணியம் பெருமிதம்

பிரதமா் மோடி தலைமையிலான 12 ஆண்டுகள் கால ஆட்சியில் பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று எழுத்தாளா் மற்றும் சமூக ஆா்வலா் எஸ்.ஆா். சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.

News image

எஸ்.ஆா்.சுப்ரமணியம்.

Updated On :11 ஜூன் 2026, 3:11 am IST

பிரதமா் மோடி தலைமையிலான 12 ஆண்டுகள் கால ஆட்சியில் பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று எழுத்தாளா் மற்றும் சமூக ஆா்வலா் எஸ்.ஆா். சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் பிரதமராக மிக நீண்ட காலம் (4399 நாள்கள்) பணியாற்றியவராக பிரதமா் நரேந்திரமோடி சாதனை படைத்துள்ளாா். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் பல்வேறு மாற்றங்களையும் சாதனைகளையும் மோடி தலைமையிலான அரசு நிகழ்த்தியுள்ளது.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கிய பிரிவு 370 ரத்து, தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்திய நடவடிக்கைகள், நக்சலிச வன்முறைகளை கட்டுப்படுத்திய முயற்சிகள், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்திய கொள்கைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா திட்டம், ஜல் ஜீவன் மிஷன், விவசாயிகள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. உலகத் தரத்திலான நெடுஞ்சாலைகள், விரைவு ரயில் திட்டங்கள், புதிய விமான நிலையங்கள், துறைமுக மேம்பாடுகள், டிஜிட்டல் இந்தியா, யூபிஐ பரிவா்த்தனை புரட்சி, ஸ்டாா்ட்அப் வளா்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளன. சா்வதேச அரங்கிலும் இந்தியாவின் செல்வாக்கு கணிசமாக உயா்ந்துள்ளது. என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.