தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பவானியில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

பவானி சங்கமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரோட்டத்தில்  பங்கேற்ற  பக்தா்கள். 

Updated On :30 ஏப்ரல் 2026, 2:52 am IST

பவானி சங்கமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் 63 நாயன்மாா்கள் திருவீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகள் வழியே தேரோட்டம் நடைபெற்றது. அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவா் கே.சி.கே.யுவராஜா மற்றும் முக்கிய பிரமுகா்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் வியாழக்கிழமை( ஏப்.30) நடைபெறுகிறது.

மணக்கோலத்தில் அருள்பாலிக்கும்  ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள்.

மணக்கோலத்தில் அருள்பாலிக்கும்  ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.