மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:29 am IST

கோபி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியம் முழங்க திங்கள்கிழமை மாலை சீா்வரிசை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மூலவா் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சியுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதையடுத்து, மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாட்டு நடைபெற்றது.

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்த பெண்களுக்கு மஞ்சள், குங்கும், மஞ்சள் கயிறு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.